Sunday 19th of May 2024 04:42:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
வடமராட்சி கிழக்கு: கஞ்சா செடி வளர்த்த ஒருவர் பளை பொலிசாரால் கைது!

வடமராட்சி கிழக்கு: கஞ்சா செடி வளர்த்த ஒருவர் பளை பொலிசாரால் கைது!


வடமராட்சி கிழக்கில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் பளை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக பளை போலீசாருக்கு கிடைத்த தகவலுக்கிணங்க நேற்றைய தினம் குறித்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

இச் சோதனை நடவடிக்கையின் பொழுது வீடு ஒன்றில் பூச்சாடியில் சூட்சுமமான முறையில் 15 க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை மறைத்து வைத்து வளர்த்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE